சிலுவையினண்டையில்

 


நான் வாஞ்சித்தோனாய் காத்து சிலுவையண்டையில்,
கற்பாறையின் நல் நிழலில் இச்சோர்ந்த பூமியில்,
வனாந்திரத்தில் ஓர் வாசமே வெம் கோடை காய்ச்சலில்,
ஓர் தாபரம் யாம் தங்கி ஓய சோர்ந்தபாதையில்.


ஆனந்தமான நிழல் வந்தோர்க்கு இன்பமே,
விண் வீட்டின் நீதி திக்கற்றோரும் ஆனந்திக்க,
இவ்வாக்குத்தத்தம் தந்தாரே மா தூய வார்த்தையே,
என் இயேசுவின் சிலுவையே விண்ணேகும் வழியாம்.


அப்பாலே அங்கே ஆழி மா இருள் சூழ்ந்துமே,
மரண குழி உண்டங்கே பாதாள அகலம்,
இதன் இடையே நிற்குதே நம் நேசர் சிலுவை,
தம் கைகள் விரித்தே நம் நித்ய வாழ்வின் பாதையாம்.


என் கண்கள் காணுதே ஆம் எனக்காய் மாண்டதை,
வேதனையுடன் காண்கிறேன் அவர் துன்புற்றதை,
என் நொந்த உள்ளம் கொண்டே நான் கண்ணீரோடே நின்றே,
இவ்விந்தை அன்பும் பரிவும் என் பாத்ரமின்மையும்.


இன்நிழலில் நானுமே ஆம் தஞ்சமாயினேன்,
வேரென்ன நான் வாஞ்சிப்பேனே அவர் பிரகாசமே,
ஆம் போதும் அது எனக்கு வேறொன்றும் வாஞ்சியேன்,
என் பாவ தேகம் எந்தன் வெட்கம் மேன்மை சிலுவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *