எல்லா படைப்பும் ஒன்றாக

 


எல்லா படைப்பும் ஒன்றாக,
வல்ல நம் இராஜன் போற்றுவோம்,
அல்லேலூயா அல்லேலூயா
நீர் மா பிரகாச சூரியன்,
மென் வெள்ளி ஒளி சந்திரன்,


பல்லவி
போற்றுவோமே, புகழ்பாடி,
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா


ஓங்கியே வீசும் காற்றே நீ,
வானிலுலவும் முகிலே,
அல்லேலூயா அல்லேலூயா
மெல்ல எழும் நிலவே நீ,
மாலை மின்னும் சிற்றொளியே,


ஓடும் தெளிர் நீரோடையே,
பாடலொன்றை நீ பாடியே,
அல்லேலூயா அல்லேலூயா
வன் சக்தி தரும் ஜுவாலையே,
நீ தரும் அனல் ஒளியும்,


பூமித்தாயே, நாளும் நீ,
ஆசீர் பொழிந்தென்னாளும்,
அல்லேலூயா அல்லேலூயா
பூ காய்கள் கனிதரும் நீ,
யாவும் நல் ஆசீர் பேணுதே,


மென் மனம் கொண்ட மாந்தரே,
மன்னித்தும் பங்கை படைப்பீர்,
அல்லேலூயா அல்லேலூயா
துன்பத்தினூடே துக்கித்தே,
யாவும் வைப்பீரவர் பாதம்,


நன் மரணமே இனிமை,
காத்திரு என் கடைஸ்வாசம்,
அல்லேலூயா அல்லேலூயா
என் தந்தை வீடே சேர்த்திட,
கிறிஸ்தேசு சென்ற பாதையில்,


யாவும் கர்த்தரை போற்றட்டும்,
தாழ்மையாய் வீழ்ந்து குனிந்து,
அல்லேலூயா அல்லேலூயா
தந்தை சுதன் தூயாவியே,
மூவராம் ஏகர் போற்றுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *