எக்காலும் இயேசுவே சகாயராயிரும்

 


எக்காலும் இயேசுவே! சகாயராயிரும்;
அன்பான சத்தத்தால்; என் ஏக்கம் நீக்கிடும்
எந்நாளும் நீரே வேண்டும் இந்த நாளும் வேண்டும்
நீர் என்னை நோக்கிப் பாரும் பேரன்பரே!


எப்போதும் இயேசுவே! இப்பாவியோடிரும்;
தீயோனின் சோதனை – ஓயாமல் விலக்கும்


எக்காலும் இயேசுவே! இக்கட்டு வாழ்விலும்
அன்பாகத் தங்குவீர் – என் நீச நெஞ்சிலும்


எப்போதும் இயேசுவே! இப்பேதைக் கிரங்கும்;
மெய்ஞானம் சத்தியம் – செய்நன்றி போதியும்


எக்காலும் இயேசுவே! எக்கேடும் நீக்குமேன்;
காருண்ய நாயகா! நீர் என்னை ஆளுமேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *