ஆனந்த களிப்பாய் நாம் பாடுவோம்

 


தூதர் வாழ்த்தி பாடிப் போற்றினரே,
மேய்பர் வயல்வெளிகளில் காத்து நிற்க
தம் மந்தையை இரவின் குளிரில்
மிக ஏழை எளிய மக்களாமே,


பல்லவி
ஆனந்த களிப்பாய் நாம் பாடுவோம்
நம் இஸ்ரவேலின் ராஜனை.


விண்ணில் நோக்கிப்பார்க்க மின்னும்
நட்சத்ரமே, தூர கிழக்கில் அதோ
ப்ரகாசிக்குதே,பூமியின்மேல் ஓர்
பேரொளியாய் இரவும் பகலும்
தோன்றி நின்றதே,


அதோ நட்சத்ரம் ஒளிகாட்டிடவே,
மூன்று ஞானியர் தூர தேசம் முதல்
தாங்கள் தேடி வரும் கோவை கண்டிடவே,
அதை பின் சென்று தொடர்ந்தே வந்தனரே,


விந்தை அந்த நட்சத்ரம் தென்மேற்கில்
சென்று, பெத்லகேமின் சிற்றூரில் ஓய்ந்ததே,
அங்கேயே தங்கி எங்கும் செல்லாமலே,
இயேசு பாலன் பிறந்த இடம் நின்றதே,


அவ்விடம் அடைந்து அம்மூவருமே,
மிக பக்தியாய் சாஷ்டாங்கமாய் விழுந்து,
பொன்னும் வெள்ளைப்போளமும்
தூபவர்க்கமும் படைத்தே மகிழ்ந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *