1.பிளவுண்ட மலையே புகலிடம் தாருமே
பக்கம் பட்ட காயமும் பாய்ந்த செந்நீர் வெள்ளமும்
பாவ தோஷங்கள் யாவும் போக்கும்படி அருளும்


2. எந்தக் கிரியை செய்துமே உந்தன் நீதி கிட்டாதே;
கண்ணீர் நித்தம் சொரிந்தும் கஷ்ட தவம் புரிந்தும்
பாவம் நீங்க மாட்டாதே நீரே மீட்பர் இயேசுவே.


3. யாதுமற்ற ஏழை நான் , நாதியற்ற நீசன் தான்;
உம் சிலுவை தஞ்சமே , உந்தன் நீதி ஆடையே
தூய ஊற்றை அண்டினேன் தூய்மையாக்கேல் மாளுவேன்.


4. நிழல் போன்ற வாழ்விலே கண்ணை மூடும் சாவிலே
கண்ணுக்கெட்டா லோகத்தில், நடுத்தீர்வை தினத்தில்,
பிளவுண்ட மலையே, புகலிடம் ஈயுமே.

https://youtu.be/U2ucwuJwIRg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *