எந்தன் ஜீவன்(Nottingham)

 


1. எந்தன் ஜீவன் இயேசுவே
சொந்தமாக ஆளுமே
எந்தன் காலம் நேரமும்
நீர் கையாடியருளும்.


2. எந்தன் கை பேரன்பினால்
ஏவப்படும்; எந்தன் கால்
சேவை செய்ய விரையும்
அழகாக விளங்கும்.


3. எந்தன் நாவு இன்பமாய்
உம்மைப் பாடவும், என் வாய்
மீட்பின் செய்தி கூறவும்
ஏதுவாக்கியருளும்


4. எந்தன் ஆஸ்தி, தேவரீர்
முற்றும் அங்கீகரிப்பீர்;
புத்தி கல்வி யாவையும்
சித்தம்போல் பிரயோகியும்.


5. எந்தன் சித்தம், இயேசுவே,
ஒப்புவித்துவிட்டேனே;
எந்தன் நெஞ்சில் தங்குவீர்
அதை நித்தம் ஆளுவீர்.


6. திருப்பாதம் பற்றினேன்
எந்தன் நேசம் ஊற்றினேன்
என்னையே சமூலமாய்
தத்தம் செய்தேன் நித்தமாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *