வயல் உழுது தூவி

 


1.வயல் உழுது தூவி
நல் விதை விதைப்போம்;
கர்த்தாவின் கரம் அதை
விளையச் செய்யுமாம்;
அந்தந்தக் காலம் ஈவார்
நற்பனி மழையும்
சீதோஷ்ணம் வெயில் காற்று
அறுப்பு வரையும்.


Ref
நல் ஈவுகள் யாவும்
ஈபவர் கர்த்தரே;
துதிப்போம் என்றும் துதிப்போம்
அவர் மா அன்பையே.


2.விண் வானம் ஆழி பூமி
அவரே சிருஷ்டித்தார்;
புஷ்பாதி விண் நட்சத்திரம்
பாங்காய் அமைக்கிறார்;
அடக்கி ஆழி காற்று
உண்பிப்பார் பட்சிகள்;
போஷிப்பிப்பார் அன்றன்றும்
மைந்தாராம் மாந்தர்கள்.


3.நல் ஈவு பலன் பாக்கியம்
விதைப்பு அறுப்பை
ஜீவன் சுகம் ஆகாரம்
தரும் பிதா உம்மைத்
துதிப்போம், அன்பாய் ஏற்பீர்
படைக்கும் காணிக்கை;
யாவிலும் மேலாய்க் கேட்கும்
தாழ்மையாம் உள்ளத்தை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *