நாமும் ஆற்றண்டை சேர்வோமா

 


நாமும் ஆற்றண்டை சேர்வோமா?
தூதர் கால்கள் சென்ற பூமி,
என்றும் மின்னும் பளிங்காக,
நம் ஆண்டவர் சிம்மாசனம்,


பல்லவி
ஆம் நாம் ஆங்கே ஒன்றாய் சேர்வோம்,
அவ்வழகான அழகான ஊற்று,
தூதரோடு சேர்ந்தே நாமும்
ஆண்டவர் சன்னதி முன்பாக.


நாமும் கரையோரம் வந்து,
அந்த வெள்ளி ஊற்றை கண்டு,
போற்றி பாடி தொழுதேற்றி,
நல் வெண்ணங்கி கிரீடமும்,


அங்கே வந்ததும் நம் பாரம்,
எல்லா துன்பத்தையும் வைத்தே,
கிருபை நம்மை மீட்கும் பாரேன்,
அந்த நாள் முழுதும் தொழுவோம்,


மகிழ் கொண்டு வீசும் ஊற்று,
காண்போம் ஆண்டவரின் முகம்,
தூயோர் நித்ய வாழ்வு வாழ,
இன்ப பாடல்கள் கேட்குமே,


வேகம் நாமும் அங்கே சேர்வோம்,
ஓயும் நம் பியாணம் அன்று,
மகிழ்கொள்ளும் நமதுள்ளம்,
நாமும் சாந்தமாய் பாடிடுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *