கிரீன்லாந்தின் பனிமலை துவங்கி

 


கிரீன்லாந்தின் பனி மலை துவங்கி,
இந்திய பவள பாறை வரை,
ஆப்ரிக்க வெண் நீர் வீழ்ச்சி
விழுந்தோடும் மணல் மீது,
பல பழமையான நதிகளும்
பனை பாலைவனமும்,
தாம் தவறிய வழி சீராக்க,
நம்மை அழைக்குதே.


நல் நறுமணம் தவழ்ந்தே வீசுதே,
ஜாவாவின் கரையிருந்தே,
எல்லாம் நன்றாயிருக்க,
மக்கள் வாழ்வு விடிவின்றி,
வீண் தேவையற்ற வெகுமதி
பாழான வாழ்விலே,
கண்ணிருந்தும் காணாது,
கல், மரம் வணங்கியே.


நாம் பெற்ற ஞானம் ஆசீர்,
பரத்திலிருந்து, வைப்போமா
நாமே நமக்காய், அவர்க்காய்
பகிர்ந்தளிப்போம்,
இரட்சிப்பு நம் இரட்சிப்பு
நற்செய்தி இதுவன்றோ?
உலகின் கோடி தேசமும்,
நற்செய்தி சொல்வோமே.


மிதந்து நகர்ந்து செல் காற்றே
உருண்டோடும் நீரலையும்,
இரு துருவமும் தொடும்
கடலலைபோலே, அவர் நாமம்
சொல் எங்கும், நம் மீறுதலின்
விளைவாலே பலி ஆடாய்
மாண்டாரே, நம் கர்த்தர் மீட்பர்
ராஜா, வந்தாளுவார் என்றும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *