காரிருளில் என் நேச

 


1. காரிருளில், என் நேச தீபமே, நடத்துமேன்
வேறொளியில்லை, வீடும் தூரமே, நடத்துமேன்
நீர் தாங்கின், தூர காட்சி ஆசியேன்;
ஓர் அடி மட்டும் என்முன் காட்டுமேன்.


2. என் இஷ்டப்படி நடந்தேன், ஐயோ; முன்னாளிலே;
ஒத்தாசை தேடவில்லை; இப்போதோ நடத்துமே;
உல்லாசம் நாடினேன், திகிலிலும்
வீம்புகொண்டேன், அன்பாக மன்னியும்.


3. இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தீர்;
இனிமேலும் காடாறு சேறு குன்றில்
தேவரீர் நடத்திடும்; உதய நேரம் வர, களிப்பேன்;
மறைந்து போன நேசரைக் காண்பேன்.Amen

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *