என் இயேசுவே உம்மையே

 


1. என் யேசுவே! உம்மையே நான் நேசிக்கிறேன்;
வேறெந்த வீண் வாழ்வையும் நாடாதிருப்பேன்;
உம்மாலே மா நன்மையை நான் கண்டடைந்தேன்;
என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன்.


2. இப்பாவியின் பேரில் முந்தி நேசம் வைத்தீர்;
நீர் பிராணத்தியாகஞ் செய்து மீட்டுக்கொண்டீர்;
முட் க்ரீடம் ஐங்காயமும் தியானிக்கிறேன்;
என் நாதா! மேன் மேலும் உம்மை நேசிக்கிறேன்.


3.பேரன்பின் சொரூபி! உம்மைப் போற்றுகிறேன்;
எப்போதும் உம்மண்டை தங்க வாஞ்சிக்கிறேன்;
என் ஜீவன் போனாலுங்கூட நீங்கமாட்டேன்;
என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன்.


4.பேரின்ப மேலோகத்தில் ஆனந்தங்கொள்வேன்;
நீடூழி உம்முகம் கண்டு ஸ்தோத்திரிப்பேன்;
எப்பாவ மில்லாமலும் நான் வாழ்த்தல் செய்வேன்
என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *