ஆனந்தமாய் ஸ்தோத்தரிப்போம்

 


ஆனந்தமாய் ஸ்தோத்தரிப்போம்,
வல்ல அன்பின் ஆண்டவா,
மலர் போலே எங்கள் மனம்
உம் முன்னே மலர்ந்ததே,
எங்கள் துக்கம் பாவமகற்றும்,
அவிசுவாசம் நீக்குமே,
நித்யானந்தம் தருவீரே
மெய் ஒளியால் நிரப்பும்.


மகிழ்சியாய் உம்மை சூழ்ந்தே
மண்ணும் விண்ணும் வாழ்த்துதே,
போற்றும் வானோர் விண்மீன் கூட்டம்
துதிகளில் உம் வாசம்,
வயல்வெளி காடு மலைகள்
பள்ளத்தாக்கு கடலலையும்
பூவும் குயிலும் பாயும் நீர்வீழ்ச்சி
அழைக்கிறதானந்திக்க.


நீரே எல்லாம் தந்து மன்னித்தீர்
ஆசீர்வாதம் ஆசி நீர்,
ஜீவ ஊற்றும் வாழ்வின் இன்பம்
ஆழ்கடல் மகிழ் ஓய்வும்,
நீரே தந்தை சகோதரர்
அன்பில் வாழும் எல்லாமே,
அனைவரையும் யாம் நேசிக்க
நித்தய மகிழ்சியில் சேர்த்திடும்.


மாந்தரே நாம் கூடிஅர்ப்பரிப்போம்
விண்மீன் பாடல் தொடர்ந்திட,
எங்கள் தந்தை உந்தன் அன்பு
ஒன்றாய் எம்மை இணைக்குமே,
பாடி போற்றி முன் செல்வோமே
வெற்றி தாரும் குழப்பத்திலே,
ஆனந்த தொனிதான்
உம்மிடம் நடத்தும்
வாழ்வின் வெற்றி பாடலே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *