ஆத்மமே, உன் ஆண்டவரின்

 


1. ஆத்மமே உன் ஆண்டவரின்
திருப்பாதம் பணிந்து ;
மீட்பு, சுகம், ஜீவன், அருள்
பெற்றதாலே துதித்து;
அல்லேலுயா, என்றென்றைக்கும்
நித்ய நாதரைப் போற்று .


2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற
தயை நன்மைக்காய்த் துதி ;
கோபங்கொண்டும் அருள் ஈயும்
என்றும் மாறாதோர் துதி ;
அல்லேலுயா, அவர் உண்மை
மா மகிமையாம், துதி .


3. தந்தைபோல் மா தயை உள்ளோர் ;
நீச மண்ணோர் நம்மையே
அன்பின் கரம்கொண்டு தாங்கி
மாற்றார் வீழ்த்திக் காப்பாரே ;
அல்லேலுயா , இன்னும் அவர்
அருள் விரிவானதே .


4. என்றும் நின்றவர் சமூகம்
போற்றும் தூதர் கூட்டமே ;
நாற்றிசையும் நின்றெழுந்து
பணிவீர் நீர் பக்தரே ;
அல்லேலுயா , அனைவோரும்
அன்பின் தெய்வம் போற்றுமே .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *